முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்


சென்னை: முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். “யுஜிசி நெட் தேர்வைத் தொடர்ந்து முதுநிலை நீட் தேர்வையும் ஒன்றிய அரசு ஒத்திவைத்துள்ளது; முதுநிலை நீட் தேர்வு ரத்தானதால் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் மிகுந்த விரக்தி அடைந்துள்ளனர்” என முதல்வர் தெரிவித்துள்ளார்.

தொழில்முறை படிப்புகளில் நேர்மையான தேர்வு முறையை கொண்டுவர அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது;

நெட் தேர்வை தொடர்ந்து முதுநிலை நீட் தேர்வும் ஒத்திவைக்கப்பட்டதால், நமது ஆயிரக்கணக்கான மருத்துவர்களை விரக்தியில் ஆழ்த்தியுள்ளது. மருத்துவம் போன்ற தொழில்முறை படிப்புகளில் நேர்மையான தேர்வு முறையை கொண்டுவர நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

* தொழில்முறை படிப்புகளுக்கான நியாயமான மற்றும் சமமான தேர்வு செயல்முறையை உருவாக்க வேண்டும்.

* பள்ளிக் கல்வியின் முதன்மையை உறுதி செய்யவும், அதை தொழில் வாழ்க்கைக்கு அடிப்படையாகவும் மாற்ற வேண்டும்.

* தொழில்முறை படிப்புகளுக்கான தேர்வுமுறையைத் தீர்மானிக்க மாநிலங்களின் உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும்

* மிக முக்கியமாக, மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் மனதில் மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்று இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

The post முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: