தமிழக நீர்வளத்துறையில் செயற்பொறியாளர்கள் 15 பேருக்கு பதவி உயர்வு: அரசு உத்தரவு

சென்னை: தமிழக அரசின் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: சென்னை பொதுப்பணித்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு துணை தலைமை பொறியாளர் சிவகுமார் சென்னை நீர்வளத்துறை திட்ட மேலாண்மை கண்காணிப்பு பொறியாளராகவும், மதுரை மருத்துவம் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு செயற்பொறியாளர் வேல்முருகன் சென்னை நீர்வளத்துறை கனிமம் மற்றும் கண்காணிப்பு வட்ட கண்காணிப்பு பொறியாளராகவும், சேலம் சரபங்கா கோட்ட செயற்பொறியாளர் கவுதமன் பவானிசாகர் வடிநில வட்டம் கண்காணிப்பு பொறியாளராகவும், அம்பாசமுத்திரம் நீர்வளத்துறை சிறப்புத் திட்ட கோட்ட செயற்பொறியாளர் விஜயகுமார் சென்னை நீர் ஆய்வு நிறுவன கண்காணிப்பு பொறியாளராகவும், நீர்வளத் துறை சேலம் திட்டம் மற்றும் வடிவமைப்புப் பிரிவு செயற்பொறியாளர் பிரகாஷ் சேலம் மேல் காவிரி வடிநில வட்டம் கண்காணிப்பு பொறியாளராகவும், கீழ் வைகை வடிநில செயற்பொறியாளர் பால்பாண்டியன் திருச்சி பாசன மேலாண்மை பயிற்சி நிறுவன கண்காணிப்பு பொறியாளராகவும், சென்னை சிறப்பு திட்ட கோட்ட செயற்பொறியாளர் மனோகரன் திட்டம் மற்றும் உருவாக்கம் இணை தலைமை பொறியாளராகவும், சென்னை நிலத்தடி நீர் ஆதார விவர குறிப்பு மையம் கோட்ட செயற்பொறியாளர் ராஜா சென்னை நிலத்தடி நீர் ஆதார விவர குறிப்பு மையம் இணை தலைமை பொருளாளராகவும், மருதையாறு போட்ட வடிநில செயற்பொறியாளர் ஆசைத்தம்பி நீர்வளத்துறை திருநெல்வேலி திட்ட வடிநில கண்காணிப்பு பொறியாளராகவும்,கொள்ளிடம் வடிநில கோட்ட செயற்பொறியாளர் சாம்ராஜ் திருவண்ணாமலை பெண்ணையாறு வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளராகவும், சென்னை ஊழல் தடுப்பு பிரிவு செயற்பொறியாளர் பிரபாகர் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்துதல் திட்டத்தில் கண்காணிப்பு பொறியாளராகவும், மயிலாடுதுறை காவிரி வடிநில கோட்ட செயற்பொறியாளர் தட்சணாமூர்த்தி கடலூர் வெள்ளாறு வடிநில வட்டம் கண்காணிப்பு பொறியாளராகவும், திருச்சி சுற்றுச்சூழல் பிரிவு செயற்பொறியாளர் ஞானாம்பாள் மாநில நீர்வள ஆதார மேலாண்மை முகமை கண்காணிப்பு பொறியாளராகவும், காவிரி தொழில்நுட்ப பிரிவு செயற்பொறியாளர் வெங்கட் ராமகிருஷ்ணன் சென்னை நீர்வள ஆதார விவர குறிப்பு மையம் கண்காணிப்பு பொறியாளர் (சிவில்) ஆகவும், செயற்பொறியாளர் தேன்மொழி மதுரை நிலத்தடி நீர் ஆதார விவர குறிப்பு மையம் கண்காணிப்பு பொறியாளராகவும பதவி உயர்வு வழங்கி பணி இடமாற்றம் செய்யப்படுகின்றனர்….

The post தமிழக நீர்வளத்துறையில் செயற்பொறியாளர்கள் 15 பேருக்கு பதவி உயர்வு: அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: