அதன்படி என்டிஆரின் மகளும், சந்திரபாபு நாயுடுவின் மைத்துனியும், மாநில பாஜக தலைவரும் எம்பியுமான புரந்தேஸ்வரிக்கு அந்த வாய்ப்பு வழங்க ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. ஆந்திராவை சேர்ந்த தனது உறவினர் பெண்ணுக்கு சபாநாயகர் பதவி கிடைப்பதன் மூலம் சந்திரபாபுநாயுடுவை திருப்திபடுத்த முடியும் என பாஜ கருதுகிறதாம். இந்நிலையில் புரந்தேஸ்வரி, நேற்றுமுன்தினம் இரவு உண்டவல்லியில் முதல்வர் சந்திரபாபுநாயுடுவை அவரது வீட்டில் திடீரென சந்தித்தார். அப்போது அவருடன் ஒன்றிய அமைச்சர் பூபதிராஜு சீனிவாசவர்மா மற்றும் பாஜக எம்பிக்கள், எம்எல்ஏக்கள் உடனிருந்தனர். புரந்தேஸ்வரியும், சந்திரபாபுநாயுடுவும் சுமார் 1 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
The post மக்களவை சபாநாயகராக நியமனமா? ஆந்திரா பாஜ தலைவர் புரந்தேஸ்வரி முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் சந்திப்பு: ஒரு மணிநேரம் பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.