ரெட்டியார்சத்திரம் கதிரையின்குளத்தில் பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

ரெட்டியார்சத்திரம், ஜூன் 20: ரெட்டியார்சத்திரம் அருகே கதிரையின்குளத்தில் பயணியர் நிழற்குடை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், சில்வார்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கதிரையின்குளம் வழியாக செல்லும் சாலை பிரதான சாலையாக இருப்பதால் இங்குள்ள பேருந்து நிறுத்தத்தை பயணிகள் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக பள்ளி, கல்லூரி ெசல்லும் மாணவ, மாணவிகள், திண்டுக்கல் நகருக்கு வேலைக்கு செல்வோர், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால் வெயில், மழையால் பயணிகள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். எனவே ஊராட்சி நிர்வாகத்தினர் பயணியர் நிழற்குடை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ரெட்டியார்சத்திரம் கதிரையின்குளத்தில் பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: