இதனால் பாலமநல்லூர் கிராமத்தில் வீடுகளில் அதிர்வு ஏற்பட்டு சுவர்கள் மேற்க்கூரைகளில் விரிசல் ஏற்பட்டு சேதம் அடைந்தது. செய்வதறியாத கிராம மக்கள் சம்மந்தப்பட்ட கல்குவாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே இந்த கல்குவாரியில் இருந்து வரும் வெடிசத்தத்தால் நிம்மதியை இழந்து தவித்து வரும் நிலையில் தற்போது வீடுகளில் நிலா அதிர்வு ஏற்பட்டு வீடுகளில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக கிராமமக்கள் வேதனை தெரிவித்தனர். அபாயகரமான வெடி பொருட்களை கிராமத்திற்கு அருகே உள்ள குவாரிகளில் வெடிப்பதை அதிகாரிகள் எப்படி அனுமதித்தனர் என கேள்வி எழுப்பிய கிராமமக்கள் சேதமடைந்த வீடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
The post வீடுகளில் விரிசல்; பொள்ளாச்சியில் கல் குவாரியை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம்: சேதமடைந்த வீடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரிக்கை appeared first on Dinakaran.