4 தமிழக மீனவர்கள் கைது இலங்கை கடற்படைஅத்துமீறலை இந்தியா அனுமதிக்க கூடாது: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: இலங்கைக் கடற்படை அட்டகாசத்திற்கு ஒன்றிய அரசு முடிவு கட்ட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: வங்கக்கடலில் கச்சத்தீவுக்கு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த 4 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த அத்துமீறல் கண்டிக்கத்தக்கது. இந்த அத்துமீறலை இந்தியா அனுமதிக்கக் கூடாது. வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நாளை இலங்கைக்கு செல்லவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கை அதிபருடனான சந்திப்பின் போது, தமிழக மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண வழிவகை செய்ய வேண்டும்.

The post 4 தமிழக மீனவர்கள் கைது இலங்கை கடற்படைஅத்துமீறலை இந்தியா அனுமதிக்க கூடாது: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: