கள்ளச்சந்தையில் மது விற்க முயன்ற 2 பேர் கைது: 97 மதுபாட்டில்கள் பறிமுதல்

 

ஒரத்தநாடு, ஜூன் 17: தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள திருவோணம் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கள்ளச் சந்தையில் மது விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் திருவோணம் சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணு பிரசாத் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படி கையில் மிகப்பெரிய பையுடன் இருவர் நின்று கொண்டிருந்தனர்.

அவர்கள் இருவரையும் பிடித்து போலீசார் விசாரணை செய்தபோது, திருவோணம் அருகில் உள்ள வெட்டுவாக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த அருண் (28), புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள பட்டத்திக்காடு கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன் (37) என்பது தெரிந்தது. மேலும் அவர்கள் வைத்திருந்த பையில் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக 94 மது பாட்டில்கள் இருந்தது. அதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர் .

The post கள்ளச்சந்தையில் மது விற்க முயன்ற 2 பேர் கைது: 97 மதுபாட்டில்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: