மின்சாரம் தாக்கி லைன்மேன் பலி

பாலக்காடு, ஜூன் 16: பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோடு அருகே எலவஞ்சேரியைச் சேர்ந்த சந்திரனின் மகன் ரஞ்ஜித் (34). இவர், கொல்லங்கோடு செக்‌ஷன் அலுவலகத்தில் லைன்மேனாக பணி புரிந்து வந்தார். இவர், கொல்லங்கோட்டை அடுத்த பொன்னுக்கெட்டாம்பாறை பகுதியில் மின்கம்பங்களில் பராமரிப்பு பணிகளில் நேற்று முன்தினம் ஈடுபட்டுள்ளார்.

அப்போது, திடீரென மின்சாரம் தாக்கி மின் கம்பத்திலிருந்து தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார். சம்பவத்தை பார்த்த சக ஊழியர்கள் ரஞ்ஜித்தை மீட்டு பாலக்காடு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து நடந்த இடத்தை மின்வாரிய உயர் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த விபத்து குறித்து கொல்லங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மின்சாரம் தாக்கி லைன்மேன் பலி appeared first on Dinakaran.

Related Stories: