லாட்டரி சீட்டுகள் விற்பனைக்கு வைத்திருந்த முதியவர் கைது

 

ஊட்டி, ஜூன் 18: லாட்டரி சீட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்த முதியவரை சேரம்பாடி போலீசார் கைது செய்தனர். தமிழகத்தில் லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. இருந்த போதிலும், அண்டை மாநிலமான கேரளாவில் லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இதை வாங்கி சிலர் தமிழ்நாட்டிற்குள் விற்பனை செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இவர்களை அவ்வப்போது போலீசார் பிடித்து வழக்கு பதிவு செய்த போதிலும், ஒரு சில பகுதிளில் தொடர்ந்து கேரள மாநில லாட்டரி சீட்டுக்கள் வாங்கி சிலர் விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக – கேரள எல்லையான சேரம்பாடியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது சந்தேகத்திற்கு இடையே ஒருவர் நின்றுக் கொண்டிருப்பதை பார்த்து, அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும், அவரிடம் சோதனை மேற்கொண்ட போது, அவர் பெயணர் ராஜன்(52) எனத் தெரிய வந்தது. மேலும், அவரிடம் கேரள மாநில 46 லாட்டரி சீட்டுக்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின், அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

The post லாட்டரி சீட்டுகள் விற்பனைக்கு வைத்திருந்த முதியவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: