ரத்த தான முகாம்

மல்லசமுத்திரம், ஜூன் 16:மல்லசமுத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், நேற்று ரத்த கொடையாளர்கள், அலுவலக ஊழியர்கள் சார்பில் ரத்த தான முகாம் நடந்தது. இதில் 20 பேர் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினர். முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் ஜெகதீஷ் தலைமை வகித்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பாலு, சுகாதார ஆய்வாளர்கள் பிரகாஷ், மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ரத்த தான முகாம் appeared first on Dinakaran.

Related Stories: