திருச்சி-திண்டுக்கல் சாலையில் போலீஸ் வாகனம்-ஆட்டோ மோதல்

 

திருச்சி, ஜூன் 14: திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நேற்றிரவு போலீஸ் வாகனம்-ஆட்டோ மோதிக்கொண்ட விபத்தில் கர்ப்பிணி பெண் உள்ளிட்ட 3 பேர் காயமடைந்தனர். திருச்சி மாவட்டம் பிராட்டியூர் புங்கனூர் தாய் நகரை சேர்ந்தவர் சேகர் மனைவி சந்திரா(45). இவர் மகள் சத்யா (23). ஐந்து மாத கர்ப்பிணி. இவர்கள் இருவரும் நேற்றிரவு கர்ப்பினியான சத்யாவின் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு ஆட்டோவில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

திருச்சி பெரியமிளகுபாறை கோரிமேட்டை சேர்ந்த டிரைவர் அருணாச்சலம் (60) என்பவர் ஆட்டோவை ஓட்டினார். திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பிராட்டியூர் ஆர்டிஓ அலுவலகம் அருகே வலதுபுறமாக ஆட்டோ திரும்பியது. அப்போது மணப்பாறையில் இருந்து திருச்சி நோக்கி வந்த போலீஸ் வாகனம் ஆட்டோ மீது எதிர்பாரத விதமாக மோதியது.

இதில் ஆட்டோ கவிழ்ந்ததில் ஆட்டோ ஓட்டுநர் அருணாச்சலம், ஆட்டோவில் பயணித்த சந்திரா, சத்யா ஆகிய மூவரும் காயமடைந்தனர். உடன் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சந்திரா, சத்யா இருவரையும் மீட்டு பிராட்டியூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அருணாச்சலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வாயிலாக அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து திருச்சி மாநகர போக்குவரத்துப் புலனாய்வு தெற்கு பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post திருச்சி-திண்டுக்கல் சாலையில் போலீஸ் வாகனம்-ஆட்டோ மோதல் appeared first on Dinakaran.

Related Stories: