திருச்சியில் திமிங்கல உமிழ்நீர் விற்க முயன்ற 5 பேர் கைது: வனத்துறையினர் அதிரடி

 

திருச்சி, ஜூன் 14: திருச்சியில் திமிங்கல உமிழ்நீர் (Ambergris) விற்பனை செய்ய முயன்ற 5 பேரை வனத்துறையினர் அதிரடியாக நேற்று கைது செய்தனர். சென்னை வனக்காவல் நிலையத்திற்கு கிடைத்த ரகசிய தகவலின்படி மதுரை TNWCCB வனக்காவல் நிலைய படையினர் திருச்சி மிளகுபாறை பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நேற்று முன்தினம் மாலை அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது மதுரை மாவட்டம் வாடிப்பட்டி கல்லணை கிராமத்தை சேர்ந்த கார்த்திக்(36), வடிவேலன் (42), கோவில்பட்டியை சேர்ந்த சண்முகப்பிரியன் (38), தென்காசி மாவட்டம் பாலூர் சத்திரம் பகுதியை சேர்ந்த குமார் (43) மற்றும் கடையநல்லூர் வட்டம் குணராமநல்லூரை சேர்ந்த ஜெயபால் ஞானசிங் ஆகியோரிடம் இருந்து 19.200 கி.கி எடை கொண்ட நான்கு கட்டிகள் திமிங்கலம் உமிழ்நீர் (Ambergris) இருந்தது கண்டறியப்பட்டது.

5 பேரையும் திருச்சி வனச்சரங்க அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் நடந்த விசாரணையில், 5 பேரும் இந்த கடத்தலை கடந்த இரண்டு ஆண்டுகளாக செய்து வந்தது தெரியவந்தது. தொடர்ந்து 5 பேர் மீதும் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு திருச்சி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

The post திருச்சியில் திமிங்கல உமிழ்நீர் விற்க முயன்ற 5 பேர் கைது: வனத்துறையினர் அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: