காயங்களுடன் பெண் மீட்பு

 

திருச்சி, ஜூன் 11: திருச்சியில் காயங்களுடன் கிடந்த பெண்ணை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருச்சி தென்னூரை சேர்ந்தவர் காதர் மொய்தீன்(52). இவர் ஜெயில் பேட்டை துர்க்கையம்மன் கோயில் பஸ் ஸ்டாப் அருகே கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் காலை கடையை திறப்பதற்காக வந்தார். அப்போது காம்ப்ளக்ஸ் மாடிப்படியில் 45 வயது மதிக்கத்தக்க பெண் முகம், தலையில் காயங்களுடன் அரை நிர்வாணத்துடன் கிடந்தார்.

இது குறித்து காந்தி மார்க்கெட் போலீசாருக்கு காதர் மொய்தீன் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிந்து அவரை தாக்கியது யார் என விசாரித்து வருகின்றனர்.

The post காயங்களுடன் பெண் மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: