சென்னை : குவைத் தீ விபத்தில் 5 தமிழர்கள் உயிரிழந்திருக்கக் கூடும் என்று அயலக தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பான விவரங்கள் தமிழ்ச்சங்கங்கள் மூலம் கிடைத்துள்ளன என்றும் உயிரிழந்தவர்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ செய்தி இன்னும் சிக்கவில்லை எனவும் அமைச்சர் தகவல் அளித்துள்ளார்.