இருப்பினும், விருதுநகர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையின் போது குளறுபடிகள் நடைபெற்றதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டியிருந்தார். சில மணி நேரங்களில் முடிவுகளை அறிவிக்காமல் தாமதப்படுத்தப்பட்டது. போட்டி கடுமையாக இருந்த போது வாக்கு எண்ணிக்கை வித்தியாசங்கள் குறைவாக இருந்த போதும் இதில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றசாட்டு வைத்திருந்தார்.
இது தொடர்பாக, ஏற்கனவே மறு வாக்கு எண்ணிக்கை கோரி தேமுதிக சார்பில் தேர்தல் ஆணையத்தில் வழக்கறிஞர்கள் மனு அளித்துள்ளனர். இந்த நிலையில் இன்று டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் மதியம் 3.30 மணியளவில் விஜய பிரபாகரன் தேர்தல் ஆணையரை நேரில் சந்தித்து மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும் என அவர் மனு கொடுக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
The post விருதுநகரில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் இன்று டெல்லியில் தேர்தல் ஆணையரை சந்திக்கிறார்..!! appeared first on Dinakaran.