டிரான்ஸ்பார்மரில் 135 கிலோ காப்பர் ஒயர், ஆயில் திருட்டு

கிருஷ்ணகிரி, ஜூன் 12: கிருஷ்ணகிரி ஆலப்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக இருப்பவர் சேகர். இவர் நேற்று முன்தினம் தாலுகா போலீசில் புகாரளித்தார். அதில், கிருஷ்ணகிரி அடுத்த சாந்தன்கொட்டாய் பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் ₹1 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான 135 கிலோ எடை கொண்ட காப்பர் ஒயர் மற்றும் ₹32 ஆயிரம் மதிப்பிலான ஆயில் திருடு போயுள்ளது. இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post டிரான்ஸ்பார்மரில் 135 கிலோ காப்பர் ஒயர், ஆயில் திருட்டு appeared first on Dinakaran.

Related Stories: