அதே சமயம் கடந்த 10 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தை புல்டோசர் கொண்டு இடித்ததை இனியும் தொடர முடியாது. நாடாளுமன்றத்தை சீர்குலைக்கவோ, எம்பிக்களை கேவலமாக நடத்தவோ, விவாதம் இல்லாமல் சட்டத்தை நிறைவேற்றவோ, நாடாளுமன்ற குழுக்களை புறக்கணிக்கவோ அனுமதிக்கப்படாது. இனி அவர்களால் நாடாளுமன்றத்தை முடக்க முடியாது. புதிய தேஜ கூட்டணி அரசை அதன் தவறுகளுக்கு பொறுப்பேற்க வைக்க வேண்டும். எனவே வரும் காலங்கள் நமக்கு சவாலனதாக இருக்கும். நாடாளுமன்றத்தில் எங்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இந்தியா கூட்டணி கட்சிகளின் பலத்தால் காங்கிரசும் வலுவடைந்து வருகிறது. இந்த சமயத்தில் ராகுல் காந்திக்கு எனது பாராட்டுக்களை தெரிவிக்க விரும்புகிறேன்.
எப்போதும் இல்லாத வகையில் தனிப்பட்ட முறையிலும், அரசியல் ரீதியாகவும் பல தாக்குதல்களை எதிர்கொண்டு போராடிய உறுதிப்பாட்டிற்காக ராகுல் சிறப்பு நன்றிக்கு தகுதியானவர். அரசியலமைப்பின் உத்தரவாதங்கள் மற்றும் அதன் பாதுகாப்பு குறித்த எங்களின் பிரசாரத்தை அவர் மிகவும் கூர்மையாக வடிவமைத்தார். அவரது இந்திய ஒற்றுமை நடைபயணமும், இந்திய ஒற்றுமை நீதி பயணமும் வரலாற்று சிறப்புமிக்கவை. இனி, எதிர்பார்த்ததை விட குறைவான செயல்திறன் உள்ள மாநிலங்களில் நமது கட்சியை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு சோனியா கூறினார்.
The post தேர்தல் முடிவு மோடிக்கு கிடைத்த தார்மீக தோல்வி: சோனியாகாந்தி பேச்சு appeared first on Dinakaran.