இந்நிலையில் ரயில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் நின்றபோது 50க்கும் மேற்பட்ட பயணிகள் பிளாட்பாரத்தில் இறங்கி சிஆர்பிஎப் வீரர்களுக்கு எதிராக கோஷமிட்டனர். சிஆர்பிஎப் வீரர்கள் அனைவரையும் வெளியேற்றினால் தான் நாங்கள் தொடர்ந்து பயணம் செய்வோம் என்றனர். தகவலறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே மற்றும் பாதுகாப்பு படை போலீசார் வந்து விசாரணை நடத்தினர். அப்போது பொதுப்பெட்டியில் மது போதையில் இருக்கும் சிஆர்பிஎப் வீரர் தங்களை ெசருப்பால் அடித்ததாகவும் துப்பாக்கி காட்டி மிரட்டியதாகவும் பயணிகள் குற்றம் சாட்டினர்.
மற்ற வீரர்கள் அவரை அழைத்து சென்றனர். அதன் பின் பயணிகள் அனைவரும் பொதுப்பெட்டியில் ஏறி பயணித்தனர். யாரும் புகார் அளிக்காததால், ரகளை செய்த சிஆர்பிஎப் வீரர் மீது ரயில்வே மற்றும் பாதுகாப்பு படை போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு ஏற்கனவே ஒரு மணி நேரம் தாமதமாக வந்த நிலையில், இந்த சம்பவம் காரணமாக அங்கு அரை மணி நேரம் நின்றது. கீழே இறக்கிவிடப்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் பின்னர் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் கோவை புறப்பட்டு சென்றனர்.
* ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை இளம்பெண்ணிடம் சில்மிஷம்; முதியவர் கைது
சென்னையை சேர்ந்த 31 வயது இளம்பெண், மகளுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரோட்டில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர், அங்கிருந்து கடந்த 6ம் தேதி மகளுடன் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு பெட்டியில் சென்னைக்கு சென்றுள்ளார். அந்த ரயில் சேலம் வந்தபோது முதியவர் ஒருவர் ஏறியுள்ளார். அவர் இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். அதிர்ச்சி அடைந்த அப்பெண், இது குறித்து டிக்கெட் பரிசோதகரிடம் புகார் அளித்தார். இந்நிலையில் ரயில் ஜோலார்பேட்டைக்கு சென்றதும், டிக்கெட் பரிசோதகர் ரயில்வே போலீசுக்கு தகவல் அளித்தார். இதையடுத்து இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட சேலம் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த உசேன்பாஷா(71)வை சேலம் ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
The post சென்னை-கோவை சேரன் எக்ஸ்பிரசில் பரபரப்பு ரயிலில் மதுகுடித்தபடி துப்பாக்கியை காட்டி பயணிகளை மிரட்டிய சிஆர்பிஎப் வீரர்: நடுவழியில் மக்கள் போராட்டம்; இறக்கிவிடப்பட்ட துணை ராணுவ படையினர் appeared first on Dinakaran.