தேர்தல் ஆணையம் கொஞ்சம் நியாயமாக நடந்திருந்தால் தேர்தல் முடிவுகள் இந்தியா கூட்டணிக்கு சாதகமாக இருந்திருக்கும். நடுநிலைமையோடு செயல்பட்டிருந்தால் இன்னும் கூடுதலாக 100 இடங்களில் வெற்றி பெற்று இந்தியா கூட்டணி ஆட்சியை கைப்பற்றி இருக்கும். ஒரு பொய்யான கருத்துக்கணிப்பை பாஜ ஒட்டுமொத்தமாக பரப்பியது.
எங்களை பொறுத்தவரை பாஜவுக்கு அறுதிப்பெரும்பான்மை கிடையாது. கூட்டணி அமைத்துதான் ஆட்சியை அவர்கள் அமைக்க முடியும். அப்படி இருக்கும் போது இனிமேல் பாஜ சர்வாதிகாரமாக செயல்பட முடியாது. மக்களுக்கு எதிரான சட்டங்களை அவர்கள் இனி கொண்டு வர முடியாது. இது ஒரு நல்ல வரவேற்பு. இவ்வாறு அவர் கூறினார்.
The post தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட்டிருந்தால் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்திருக்கும்: துரை வைகோ எம்.பி., பேட்டி appeared first on Dinakaran.