மின்னாம்பள்ளி கிராமத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

சேந்தமங்கலம், ஜூன் 7: புதுச்சத்திரம் வட்டார வேளாண்மைத் துறையின் சார்பில், மின்னாம்பள்ளி கிராமத்தில் விவசாயிகளுக்கு வேப்ப எண்ணை குறித்த செயல் விளக்க பயிற்சி முகாம் நடந்தது. வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் இந்திராணி தலைமை வகித்தார். வேளாண் அலுவலர் சாரதா முன்னிலை வகித்தார். பிஜிபி வேளாண்மை அறிவியல் கல்லூரி மாணவர்கள், கிராம அனுபவத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வேப்ப எண்ணெய் பற்றி செயல் விளக்கம் அளித்தனர். முகாமில் வேளாண் உதவி அலுவலர்கள், தொழில்நுட்ப உதவி மேலாளர்கள் முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனர்.

The post மின்னாம்பள்ளி கிராமத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் appeared first on Dinakaran.

Related Stories: