சிறையில் இருந்தாலும் இவர்கள் மக்களவை எம்பியாக பதவிப்பிரமாணம் செய்ய நேரில் வர அரசியலமைப்பு உரிமை உண்டு. இதற்காக சிறைத்துறையிடம் முறையாக அனுமதி பெற்று பதவியேற்பு விழாவில் பங்கேற்கலாம். அதே சமயம் அவை நடவடிக்கைகளில் அவர்கள் பங்கேற்க முடியாது. சத்தியபிரமாணம் செய்த பின்னர், அவையில் கலந்து கொள்ள முடியாததற்கான காரணத்தை சபாநாயகருக்கு கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும். அதை நாடாளுமன்ற குழு பரிசீலனை செய்து அவையில் வாக்கெடுப்பு நடத்தி அனுமதி வழங்கப்படும். குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் 2 ஆண்டுக்கு மேல் தண்டனை வழங்கப்படும் பட்சத்தில் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
The post முன்னாள் முதல்வரையே வீழ்த்தி சிறையில் இருந்தபடி வென்ற 2 எம்பிக்கள்: சட்டம் சொல்வது என்ன? appeared first on Dinakaran.