சென்னை: அதிமுகவின் தலைமையை சசிகலா ஏற்க வேண்டும் என தென்காசியில் சுவரொட்டி ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்ததை அடுத்து தலைமை ஏற்க வாருங்கள் என சசிகலாவுக்கு ஆதரவாக சுவரொட்டி ஒட்டப்பட்டது. சிங்கப் பெண்ணாக வாருங்கள்” என்ற வாசகங்களுடன் பாவூர்சத்திரத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.