மோடியின் ஆட்சிக்கு எதிரான மக்கள் தீர்ப்பு: மல்லிகார்ஜூன கார்கே பேட்டி

புதுடெல்லி: மக்களவை தேர்தல் முடிவுகள் பிரதமர் மோடியின் ஆட்சிக்கு எதிரான மக்கள் தீர்ப்பு என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். மக்களவை வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பேட்டியளித்த மல்லிகார்ஜூன கார்கே,‘‘ தேர்தல் முடிவுகள் மக்களுக்கும் ஜனநாயகத்துக்கும் கிடைத்த வெற்றி. இது மக்களின் தீர்ப்பு ஆகும்.

மக்களவை தேர்தல் என்பது மக்களுக்கும் மோடிக்கும் இடையே நடக்கும் போராட்டம் என்று காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. மக்களின் தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம். வாக்காளர்கள் எந்த ஒரு கட்சிக்கும் மெஜாரிட்டி அளிக்கவில்லை. குறிப்பாக, ஒரு நபர், ஒரே முகம் என்ற அடிப்படையில் வாக்கு சேகரித்த பாஜவுக்கு அரசியல் ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் கிடைத்த தோல்வி. இது பாஜவின் ஆட்சிக்கு எதிராக மக்கள் வழங்கிய தீர்ப்பு’’ என்றார்.

The post மோடியின் ஆட்சிக்கு எதிரான மக்கள் தீர்ப்பு: மல்லிகார்ஜூன கார்கே பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: