தற்போதைய நிலவரப்படி தமிழ்நாடு, கேரளா, மராட்டியம், உ.பி., மேற்குவங்கம், பஞ்சாப் மாநிலங்களில் இந்தியா கூட்டணி அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது. மராட்டியத்தில் இந்தியா கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. மராட்டியத்தில் பாஜக கூட்டணி 21 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 38 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் ராகுல் காந்தி – பிரியங்கா காந்தி ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். கேரள மாநிலம் வயநாடு மற்றும் ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி முன்னிலை பெற்றுள்ளார்.
The post பரபரப்பாக தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் ராகுல் காந்தி – பிரியங்கா காந்தி ஆலோசனை..!! appeared first on Dinakaran.