கடந்த மாதம், சிகாகோவில் படித்து வந்த ரூபேஷ் சந்திரகாந்த் சிந்தாகிந்த் என்ற மாணவர் மாயமானார். கடந்த ஏப்ரல் மாதம் தகவல் தொழில்நுட்பதுறையில் பட்டமேற்படிப்பு படித்து வந்த ஐதராபாத்தை சேர்ந்த மாணவர் முகமது அப்துல் அராபத் மாயமானார். பின்னர் கிளீவ்லேண்ட் என்ற இடத்தில் அவர் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மார்ச் மாதம் மிசோரியில் 34 வயது பரதநாட்டிய கலைஞர் அமர்நாத் கோஷ் சுட்டு கொல்லப்பட்டார். இப்படி இந்திய மாணவர்கள் காணாமல் போவதும், தாக்குதலுக்கு உள்ளாவதும் அடிக்கடி நடப்பது அங்கு உள்ள இந்திய சமூகத்தினர் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
The post அமெரிக்காவில் மேலும் ஒரு இந்திய மாணவி மாயம்: தொடர் சம்பவங்களால் இந்தியர்கள் அதிர்ச்சி appeared first on Dinakaran.