மேலும், நிற்க முடியாமல் இருந்த யானையை கிரேன் மூலம் தூக்கி நிறுத்தி சிகிச்சை அளித்து வந்தனர். தொடர் சிகிச்சையால் யானையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. தற்போது யானை சுறுசுறுப்பாக காணப்படுகிறது.
தாய் யானையுடன் கடந்த 4 நாட்களாக இருந்து வந்த குட்டி யானை 1ம் தேதி அதிகாலை தாயைவிட்டு பிரிந்து, தனது சகோதர யானையுடன் வனத்திற்குள் சென்றது. குட்டியானை சென்றதால் தாய் யானை தவிப்புக்குள்ளானது. இதனால், வனத்துறையினர் டிரோன் கேமிரா மூலம் குட்டி யானையை தேடி வருகின்றனர். உடல்நலம் பாதித்து இருந்த பெண் யானையின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதற்கு மசாலா புல், ஆலை இலை, அரச இலை, பழங்கள் அளிக்கப்பட்டு வருகிறது.
The post உடல்நலம் பாதிப்பு யானைக்கு 4வது நாளாக சிகிச்சை appeared first on Dinakaran.