மொத்த திருப்பணிகள் 20,166, மதிப்பீட்டுத் தொகை ரூ.5,097 கோடி. இதுவரை நிறைவுற்ற பணிகள் 7,648. நமது முதல்வரின் காலம் பக்தர்களின் நற்காலம். இந்திய ஒன்றியத்திலேயே தமிழ்நாட்டில்தான் கோயில்கள் அதிகம். காரணம் நாம் கோயில்களை வைத்து கலை வளர்த்தோம், கலவரத்தை வளர்க்கவில்லை. பண்பாட்டை வளர்த்தோம், பாகுபாட்டை வளர்க்கவில்லை. எந்த மதம் இருந்தாலும் அன்பு கொள்வதே இந்து மதம். கடவுளை கோயிலில் வைத்து வணங்கலாம். இறைவனிடம் வரம் கேளுங்கள். இறைவனை வைத்து வாக்கு கேட்காதீர்கள். அன்னைத் தமிழ்நாட்டில் ஆன்மீகத்தை அரசியலாக்கும் சூழ்ச்சிகள் தகர்க்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
The post தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.6000 கோடி கோயில் நிலங்கள் மீட்பு: அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.