தேர்தல் நேரத்தில் ஆம் ஆத்மி பிரமுகர் சுட்டு கொலை

அமிர்தசரஸ்: பஞ்சாப்பில் மொத்தமுள்ள 13 மக்களவை தொகுதிகளுக்கும் நேற்று ஒரேகட்டமாக வாக்குப் பதிவு நடந்து முடிந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அஜ்னாலா பகுதியில் உள்ள லகுவால் என்ற கிராமத்தில் வீட்டின் வௌியே அமர்ந்து சிலர் பேசி கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இந்த துப்பாக்கி சூட்டில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த தீபு என்ற தீபிந்தர் சிங் உயிரிழந்தார்.

The post தேர்தல் நேரத்தில் ஆம் ஆத்மி பிரமுகர் சுட்டு கொலை appeared first on Dinakaran.

Related Stories: