இலவச பல்திறன் மேம்பாட்டு பயிற்சி

மதுரை, மே 30: மதுரையில் அப்துல்கலாம் வழியில் நண்பர்கள் அமைப்பு, சுப்பராயலு நினைவு நடுநிலைப் பள்ளி இணைந்து பள்ளி மாணவர்களுக்கான கோடைகால இலவச பல்திறன் மேம்பாட்டுச் சிறப்புப் பயிற்சி முகாமை நடத்தியது. ஆசிரியை மு.சுலைகாபானு கல்வியின் முக்கியத்துவம், கல்வியுடன் இணைந்த பிற செயல்பாடுகளின் அவசியம் குறித்து பாடல் மற்றும் உண்மை நிகழ்வுகளை கொண்டு ‘சாதனை புரிந்து, சரித்திரம் படைப்போம்’ தலைப்பில் தன்னம்பிக்கை உரையாற்றினார். அமைப்பாளர் செந்தில் குமார், பள்ளித் தலைமையாசிரியை மணிமேகலை, ஆசிரியை நித்யா செந்தில் குமார் மற்றும் மாணவ, மாணவியர், பெற்றோர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post இலவச பல்திறன் மேம்பாட்டு பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: