வருகிற 4.6.2024ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்களின் வாக்கு எண்ணுமிட முகவர்கள் மிகவும் விழிப்புடன் இருக்கவேண்டிய அவசியம் குறித்தும் வாக்கு எண்ணிக்கையின்போது வேட்பாளர்களின் முகவர்கள் கடைபிடிக்க வேண்டிய செயல்பாடு குறித்தும் சட்ட ஆலோசகரும் மாநிலங்களவை உறுப்பினருமான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ கூட்டத்தில் பங்கேற்று காணொலி காட்சி மூலம் விளக்கமளிக்க உள்ளார். எனவே, மாவட்ட நிர்வாகிகள், சட்டமன்ற இந்நாள், முன்னாள் உறுப்பினர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
The post ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் தொகுதி வாக்கு எண்ணுமிட முகவர்கள் ஆலோசனை கூட்டம்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல் appeared first on Dinakaran.