இந்நிலையில், அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான அரிசிப்பாறை, ஈத்தக்காடு, தூவானம் பகுதியில் நேற்று முன்தினம் முதல் கனமழை பெய்து வருவதால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவியில் குளிக்க சுற்றுலாப்பயணிகளுக்கு கம்பம் கிழக்கு வனச்சரக அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். கனமழை பெய்து வருவதால் அருவிக்கு பொதுமக்கள் வர வேண்டாம் என வனத்துறையினர் கேட்டு கொண்டுள்ளனர்.
The post நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை; சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை appeared first on Dinakaran.