ஆலங்குளம் அருகே மருமகளை கத்தரிக்கோலால் குத்திய மாமனார் கைது

ஆலங்குளம், மே 25: ஆலங்குளம் அருகே ராம்நகர் பள்ளிக்கூடம் தெருவை சேர்ந்தவர் மாரி செல்வம் (38). கூலித் தொழிலாளி. இவரது மனைவி கமலா (35). பீடி சுற்றும் கூலித் தொழிலாளி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கமலா தனது குடும்ப செலவிற்காக மகளிர் சுய உதவிக்குழு மற்றும் பல்வேறு இடங்களில் கடனாக பணம் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பல லட்சம் ரூபாய் கடனாளியாகியுள்ளார். இதில் ஒரு சில இடங்களில் வாங்கிய கடனை அவரது மாமனார் முத்தையா கட்டி உள்ளார். ஆனால் தொடர்ந்து கமலா கடன் வாங்கி வந்ததால் அவரை மாமனார் கண்டித்துள்ளார். அப்போது இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த முத்தையா பீடித்தட்டில் இருந்த கத்தரிக்கோலை எடுத்து கமலாவில் கழுத்தில் குத்த முயன்றுள்ளார். அப்போது அவர் தடுத்ததால் தோள்பட்டையில் குத்தினார். இதில் காயமடைந்த கமலா ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்து ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து முத்தையாவை கைது செய்தனர்.

 

The post ஆலங்குளம் அருகே மருமகளை கத்தரிக்கோலால் குத்திய மாமனார் கைது appeared first on Dinakaran.

Related Stories: