ரகளையில் ஈடுபட்ட வாலிபர் கைது

 

வானூர், மே 25: வானூர் கரசானூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன்(42). இவர் நேற்று புதுச்சேரி-மயிலம் சாலையில் கரசானூர் பகுதியில் மதுபோதையில் அந்த வழியாக செல்பவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கு வந்த வானூர் காவல் நிலைய ஏட்டு சசிக்குமார், பிரபாகரனை எச்சரித்து வீட்டுக்கு செல்லுமாறு கூறியுள்ளார். ஆனால் அதனை கேட்காமல் தொடர்ந்து அவர் அங்கு தகராறு செய்துள்ளார். இது குறித்த புகாரின்பேரில் வானூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரபாகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post ரகளையில் ஈடுபட்ட வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: