மதுபானம் விற்றவர் கைது

 

திருக்கோவிலூர், மே 25: திருக்கோவிலூர் அடுத்த வீரட்டகரம் கிராம எல்லைக்கு உட்பட்ட செவலை ரோடு பகுதியில் அரசு மதுபானங்கள் விற்கப்படுவதாக வந்த தகவலையடுத்து திருக்கோவிலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நந்தகோபால் மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த வீராசாமி மகன் ஆண்டி(55) என்பவர் அரசு மதுபானங்களை அதிக விலைக்கு விற்று கொண்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து திருக்கோவிலூர் போலீசார் வழக்கு பதிந்து ஆண்டியை கைது செய்து, அவரிடம் இருந்து 6 குவார்ட்டர் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

The post மதுபானம் விற்றவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: