ஒகேனக்கல்லில் நீர்வரத்து 2,000 கன அடியாக சரிவு

 

மேட்டூர், மே 25: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து நேற்று முன்தினம் 3 ஆயிரம் கனஅடியாக இருந்த நிலையில், நேற்று 2 ஆயிரம் கனஅடியாக சரிந்தது.

அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 1,012 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 1,061 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக, விநாடிக்கு 2,100 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. வரத்தை விட நீர்திறப்பு அதிகமாக இருப்பதால், நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் 48.47 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று 48.36 அடியாக சற்று குறைந்தது. நீர் இருப்பு 16.79 டிஎம்சியாக உள்ளது.

The post ஒகேனக்கல்லில் நீர்வரத்து 2,000 கன அடியாக சரிவு appeared first on Dinakaran.

Related Stories: