ரூ.50 லட்சம் வழிப்பறி வழக்கில் மேலும் ஒரு வாலிபர் கைது

 

சேலம், மே.25: திருப்பூரைச்சேர்ந்தவர் மூர்த்தி. ரியல் எஸ்டேட் அதிபரான இவர், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ரூ.50 லட்ச ரூபாயுடன் பெங்களூரு சென்றுவிட்டு சேலம் வழியாக ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த கும்பலை சேர்ந்தவர்கள், அவரது காரை வழி மறித்து, அவரிடம் இருந்த பணத்தை பறித்து சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து கேரளாவை சேர்ந்த 7 பேரை கைது செய்தனர். இவர்களில் எபின் என்பவர் வழிப்பறி செய்த பணம் 10 லட்சத்தை கேரளாவில் வங்கியில் டெபாசிட் செய்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து பணத்தை வங்கியிலேயே போலீசார் நிறுத்தி வைத்துள்ளனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 4 பேர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகின்றனர். அவர்களை இன்ஸ்பெக்டர் மனோன்மணி தலைமையிலான போலீசார் தேடி வரும் நிலையில், நேற்று பாலக்காடு வடக்கன் சேரியை சேர்ந்த சந்தோஷ்(33) என்பவரை கைது செய்தனர். இவரிடம் இருந்து ரூ.10 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். பின்னர், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post ரூ.50 லட்சம் வழிப்பறி வழக்கில் மேலும் ஒரு வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: