கீழக்கரை கடலில் 150 கிலோ அரிய வகை ஆமை கரை ஒதுங்கியது

கீழக்கரை: கீழக்கரை கடற்கரையில் 150 கிலோ எடை கொண்ட அரியவகை பச்சை ஆமை இறந்து கரை ஒதுங்கியது. ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை கடற்கரையில் அரிய வகை பச்சை ஆமை இறந்த நிலையில் நேற்று கரை ஒதுங்கியது. இதுகுறித்து மீனவர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள் இறந்த ஆமையை கைப்பற்றி கீழக்கரை கால்நடை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு உடற்கூறு ஆய்வு செய்து புதைத்தனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரி கனகராஜ் கூறுகையில், ‘‘தற்போது மன்னார் வளைகுடா பகுதியான கீழக்கரை, வாலிநோக்கம், ஏர்வாடி, முந்தல், மாரியூர் போன்ற பகுதிகளில் தென்மேற்கு பருவக்காற்று வீச தொடங்கியுள்ளதால் கடல் நீரோட்டம் கடல் பகுதியில் இருந்து நிலப்பகுதியை நோக்கி வருகிறது. இதனால் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்வது தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த கடல் சீற்றத்தால் ஆமை, பாறைகள் மற்றும் படகுகளில் மோதி இறந்து கரை ஒதுங்கி இருக்கலாம்’’ என்றார்.

The post கீழக்கரை கடலில் 150 கிலோ அரிய வகை ஆமை கரை ஒதுங்கியது appeared first on Dinakaran.

Related Stories: