நொய்யல் அருகே பெட்டிக்கடையில் புகையிலை பொருள் விற்ற பெண் மீது வழக்கு

வேலாயுதம்பாளையம், மே 23: கரூர் மாவட்டம் நொய்யல் அருகே புங்கோடை பகுதியில் உள்ள ஒரு கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பான் மசாலா ,குட்கா, ஹான்ஸ், பான் பராக் மற்றும் பல்வேறு வகையான புகையிலை பொருட்களை விற்பனை செய்து வருவதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று பார்த்த போது அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. அதன் அடிப்படையில் அவற்றை பறிமுதல் செய்து விற்பனை செய்த புங்கோடை பகுதியை சேர்ந்த ராசம்மாள் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நொய்யல் அருகே பெட்டிக்கடையில் புகையிலை பொருள் விற்ற பெண் மீது வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: