போட்டி நாள் மற்றும் ரிசர்வ் நாள் என 2 நாட்களிலும் மழையால் போட்டியை நடத்தி முடிக்க முடியவில்லை என்றால் புள்ளிப் பட்டியலில் எந்த அணி முன்னிலை பெற்று இருந்ததோ அதன் அடிப்படையில் அந்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். அதுபோல பிளே ஆப் போட்டி டை-யானால் சூப்பர் ஓவர் நடத்தப்படும். சூப்பர் ஓவரும் டை ஆனால் அல்லது கூடுதல் நேரத்தின் காரணமாக நடத்தி முடிக்க முடியவில்லை என்றால் புள்ளிப் பட்டியலில் எந்த அணி முன்னிலையில் இருந்ததோ அந்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். இந்த விதிகள் அனைத்தும் இறுதிப் போட்டிக்கும் பொருந்தும். முன்பு ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு மட்டுமே ரிசர்வ் நாள் இருந்தது. இந்த ஆண்டு முதல் பிளே ஆப் போட்டிகளுக்கும் அதை பிசிசிஐ அமல்படுத்தி இருக்கிறது.
The post மழையால் பிளே ஆப் ஆட்டம் ரத்தானால் மறுநாள் நடத்தலாம்: பிசிசிஐ அறிவிப்பு appeared first on Dinakaran.