இந்நிலையில், ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் ஆணையத்தில் ஒன்றிய அமைச்சர்கள் ஜெய்சங்கர், அர்ஜூன் ராம் மெக்வால், ராஜிவ் சந்திரசேகர் ஆகியோர் புகார் அளித்தனர். அமைச்சர் ஜெய்சங்கர்,‘‘ராகுல் காந்தி தெரிவித்த கருத்துகள் பொய்யாகும். இது ராணுவத்துக்கு எதிரான தாக்குதல். இதை சர்ச்சைக்குரியதாக ஆக்கி வீரர்களின் மனு உறுதியை நிலைகுலை செய்வதாகும். இது தேர்தலில் விவாதிக்கப்படக்கூடிய பிரச்னை அல்ல. இது தேச பாதுகாப்பு சம்மந்தப்பட்டது. பாதுகாப்பு சம்மந்தமான விஷயங்களை பேசியதற்காக அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளோம்’’ என்றார்.
The post ராணுவத்தில் இரண்டு விதமான வீரர்கள் என விமர்சனம் ராகுல் மீது தேர்தல் ஆணையத்தில் பாஜ புகார் appeared first on Dinakaran.