4வது தளம் முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்ததால், அங்கிருந்த ஊழியர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியேறினர். சில பெண் ஊழியர்கள் மட்டும் வெளியேற முடியாததால், 4வது தளத்தில் உள்ள ஜன்னலை திறந்து அங்குள்ள சன்ஷேட் பகுதியில் பாதுகாப்பிற்காக தஞ்சம் புகுந்தனர். தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் 21 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் விரைந்தனர். நீண்ட நேரம் போராடி தீயை தற்போது கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்த விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் இல்லை என்ற போதும், தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
The post டெல்லியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து.. 21 தீயணைப்பு வாகனங்கள் விரைந்ததால் பரபரப்பு..!! appeared first on Dinakaran.