கொட்டி தீர்த்த மழை

ராசிபுரம், மே 14: ராசிபுரம், வெண்ணந்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று காலை முதல் கடுமையாக வெயில் வாட்டி வதைத்தது. இந்நிலையில் வெண்ணந்தூர், அத்தனூர், வெள்ளபிள்ளையார் கோயில், சௌதாபுரம், மின்னக்கல் உள்ளிட்ட பகுதிகளிலும், அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று மதியம் 2 மணியளவில் திடீரென சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால், விவசாய நிலம், வயல்களில் மழை நீர் தேங்கி நின்றது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

The post கொட்டி தீர்த்த மழை appeared first on Dinakaran.

Related Stories: