இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘‘போலீசார் யாரிடமும் பாகுபாடு காட்டக் கூடாது. வாய்மையே வெல்லும் என்பதை நினைவில் வைத்து அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும். இந்த வழக்கில் மனுதாரர் தரப்பு குற்றச்சாட்டு குறித்து போலீசார் முறையாக விசாரிக்க வேண்டும். மேலும் மனுதாரர்கள் மீதான வழக்கில் போலீசாரின் விசாரணையை 4 மாதத்திற்குள் முடித்து நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையோ, அல்லது வழக்கை முடிப்பதற்கான அறிக்கையையோ தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தனர்.
The post வாய்மையே வெல்லும் எனக்கருதி அதிகாரிகள் செயல்பட வேண்டும்: ஐகோர்ட் கிளை அறிவுறுத்தல் appeared first on Dinakaran.