சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அதில், நீதியை நிலைநாட்ட நீதி விசாரணை நடத்த வேண்டும். கள்ளச்சாரயத்தில் கலக்கப்படும் மெத்தனால் ஆந்திராவில் இருந்து வருவதாக சொல்கிறார்கள். இரு மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சனை என்பதால் சிபிஐ விசாரணை கேட்கிறோம். விவாதத்துக்கு பயந்து நாங்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்யவில்லை. இவ்வாறு தெரிவித்தார்.
The post விஷச் சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் appeared first on Dinakaran.