அன்னையர் தினம் எடப்பாடி வாழ்த்து

சென்னை: அன்னையர் தினத்தன்று அவர்களின் ஆசீர்வாதங்களை பெறுவது ஒவ்வொரு பிள்ளையின் கடமையாகும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் தன் பிள்ளைகள் மீது அதிக பாசத்தையும், அன்பையும் கொண்டிருக்கும். அன்னை தனது பிள்ளைகள் மீதும், குடும்பத்தின் மீதும் வைத்திருக்கும் அளவிட முடியாத அன்பையும்; அவர்களின் ஒப்பற்ற பங்களிப்புகள் மற்றும் தன்னலமற்ற தியாகத்தையும் கொண்டாடுவதே அன்னையர் தினமாகும். இந்த நன்னாளில், அன்னையரின் ஆசீர்வாதங்களை பெறுவது ஒவ்வொரு பிள்ளையின் கடமையாகும். கோபம், வெறுப்பு, பிடிவாதம் என தன் பிள்ளைகள் எதை காட்டினாலும், அவர்கள் மீது அன்பை மட்டுமே செலுத்தும் அன்னையரை, வாழ் நாளெல்லாம் போற்றி பாதுகாப்பது ஒவ்வொரு பிள்ளையின் கடமையாகும். போற்றுதலுக்குரிய அன்னையர் அனைவரும் பூரண நலத்தோடும், நீண்ட ஆயுளோடும் நிறை வாழ்வு வாழ்ந்திட வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்து, உலகம் முழுவதும் வாழும் அன்னையர் அனைவருக்கும் `அன்னையர் தின’ நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

The post அன்னையர் தினம் எடப்பாடி வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: