அதற்காக அரசியலுக்கு வரவில்லை. சம்பாதிக்க வேண்டும் என விரும்பியிருந்தால் நானும் எனது கணவர் ஆர்.கே.செல்வமணியும் சினிமா துறையில் பல கோடி ரூபாய் சம்பாதித்திருக்கலாம். மக்களுக்காக உழைக்கவே அரசியலை தேர்வு செய்து பணியாற்றி வருகிறேன். கடந்த 50 ஆண்டுகளில் காங்கிரஸ், தெலுங்குதேசம் என மாறி மாறி ஆட்சியில் இருந்தாலும் அப்போது இல்லாத வளர்ச்சி கடந்த 5 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ளது. எனவே நான் போட்டியிடும் நகரி தொகுதியில் ஹாட்ரிக் வெற்றி பெறுவதோடு எதிர்க்கட்சி தலைவராக உள்ள சந்திரபாபு நாயுடுவையும் தோற்கடித்து 175 இடங்களிலும் வெற்றி பெற்று ஜெகன்மோகன் ஆட்சியை அமைப்பார். இவ்வாறு அவர் கூறினார்.
The post ‘ஹாட்ரிக் வெற்றி பெறுவேன்’; நான் ஒண்ணும் பணம் சம்பாதிக்க அரசியலுக்கு வரல.! அமைச்சர் ரோஜா ஆவேசம் appeared first on Dinakaran.