அவர் கூறியதாவது: இந்தியாவில் உள்ள உண்மையான பிரச்னைகளை முன்வைத்து தேர்தலை சந்திக்க பா.ஜ பயப்பட்டு பழைய வீடியோவை வெளியிட்டு பிரசாரம் செய்கிறது. அந்த வீடியோ எப்போது வெளியிடப்பட்டது என்று நான் கேட்கிறேன். இது பழைய வீடியோ என்றால், இன்று ஏன் அதைப் பற்றி விவாதிக்கிறோம்? இரண்டாவதாக, நான் கேட்க விரும்புகிறேன், தேர்தல் நடப்பது இந்தியாவிலா அல்லது பாகிஸ்தானிலா? எங்கு தேர்தல் நடக்கின்றன? அவை இந்தியாவில் நடக்கும் போது நாம் ஏன் பாகிஸ்தானைப் பற்றி விவாதிக்கிறோம்?
கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் அதிக பணவீக்கம் குறித்து விவாதம் ஏன் நடைபெறவில்லை. விவசாயிகள் கஷ்டப்படுகிறார்கள். டீசல் முதல் விவசாய பொருட்கள் வரை அனைத்தும் விலை உயர்ந்துவிட்டன, இது ஏன் விவாதிக்கப்படவில்லை? தொழிலாளர்கள் ஏன் சுரண்டப்படுகிறார்கள், போதிய ஊதியம் கிடைக்கவில்லை. இதைப்பற்றி எல்லாம் பா.ஜ விவாதிக்காது. ஒவ்வொரு தேர்தலிலும் அவர்கள் இந்து-முஸ்லிம் பிரச்னை பற்றி பேசி தேர்தல்களில் வெற்றிபெற விரும்புகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post இந்தியாவில் தேர்தல் நடக்கும்போது பாக். பற்றி பா.ஜ பேசுவது ஏன்? பிரியங்கா காந்தி ஆவேசம் appeared first on Dinakaran.