‘’வீட்டுக்கு சப்ளை துண்டித்ததால் கோபம்’’ டிரான்ஸ்பார்மரை ஆப் செய்து ஊருக்கே மின்சாரத்தை நிறுத்திய நபரால் பரபரப்பு: வியாசர்பாடியில் அரங்கேறிய வினோதம்

பெரம்பூர்: தனது வீட்டுக்கு மின்சார சப்ளை துண்டிக்கப்பட்டதால் ஏற்பட்ட கோபத்தில், டிரான்ஸ்பார்மரை ஆப் செய்து ஊருக்கே மின்சாரம் இல்லாமல் செய்த நபரால் பெரும் பரபரப்பு நிலவியது. சென்னை வியாசர்பாடி பாலகிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவரது வீட்டில் கடந்த 4ம் தேதி காலை முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. எதற்காக மின்சாரம் துண்டிக்கப்பட்டது என்பது தெரியவில்லை. இதனால் கடும் ஆத்திரம் அடைந்த பாலகிருஷ்ணன், அந்த பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் உள்ள மின்சாரத்தை துண்டித்து எந்த வீட்டுக்கும் மின்சாரம் சப்ளை இல்லாமல் செய்துள்ளார்.

இதுபற்றி கேட்டவர்களிடம் வாக்குவாதம் செய்ததுடன் அவர்களை தாக்குவதற்கும் முயற்சித்ததாக தெரிகிறது. இதனால் பல நாட்களாக பாலகிருஷ்ணன் தெரு, முத்துதெரு, சின்னத்தம்பி தெரு உள்ளிட்ட பல தெருக்களை சேர்ந்த பொதுமக்கள், மின்சாரம் இல்லாமல் கடும் அவதிப்பட்டுவந்துள்ளனர். இந்தநிலையில் இதுசம்பந்தமாக மின்வாரிய ஊழியர்களிடம் சென்று விசாரித்ததும் உடனடியாக அவர்கள் சென்று பார்த்தனர். அப்போது டிரான்ஸ்பார்மரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பது தெரிந்தது.

இதுசம்பந்தமாக கண்ணனிடம் விசாரிக்க மின்வாரிய அதிகாரிகள் முயன்றபோது அவர் இல்லை என்ற தெரிகிறது. இதையடுத்து மின்சார வாரிய உதவி பொறியாளர் ராமையா கொடுத்த புகாரின்படி, வியாசர்பாடி போலீசார் வழக்குபதிவு செய்தனர். ‘’தனது சுயநலத்தால் பொதுமக்களுக்கும் மின்சார வாரியத்துக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கண்ணன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகளும் போலீசாரும் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post ‘’வீட்டுக்கு சப்ளை துண்டித்ததால் கோபம்’’ டிரான்ஸ்பார்மரை ஆப் செய்து ஊருக்கே மின்சாரத்தை நிறுத்திய நபரால் பரபரப்பு: வியாசர்பாடியில் அரங்கேறிய வினோதம் appeared first on Dinakaran.

Related Stories: