புதுக்கோட்டையில் கஞ்சா விற்ற 7 பேர் கைது

புதுக்கோட்டை, மே 8: புதுக்கோட்டை பாலன்நகர் வீட்டுவசதி வாரியக் குடியிருப்புப் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக திருக்கோகர்ணம் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன்பேரில், சோதனை நடத்திய போலீசார், பாலன்நகரை சேர்ந்த தருண்(22), அராபத் ரஹ்மான்(25), சுதாகர்(20), கார்த்திகேயன்(20) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 1.200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யதனர்.

இதேபோல, புதுக்கோட்டை நகரப் பகுதியில் கஞ்சா விற்றதாக அடப்பன்வயலை சேர்ந்த இப்ராஹிம்ஷா(33), செந்தில்குமார்(20), திருச்சியை சேர்ந்த ரோகித்ஜான்(20) ஆகிய 3 பேரையும் நகரக் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.

The post புதுக்கோட்டையில் கஞ்சா விற்ற 7 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: