பெருவாயல் டிஜெஎஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் அதிக மதிப்பெண் எடுத்து அசத்திய மாணவிகள்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தாலுகா, பெருவாயல், டிஜெஎஸ் நகரில் உள்ள டிஜெஎஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் அதிக மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளனர். மாணவி யு.ஆசியா செப்னா 585 மதிப்பெண்கள் எடுத்து பள்ளியின் முதலிடத்தையும், டி.கே.விஷ்ணு பிரியா 584 மதிப்பெண்கள் எடுத்து இரண்டாம் இடத்தையும், பி.தனுஷியா 578 மதிப்பெண்கள் எடுத்து மூன்றாம் இடத்தையும், சாருமதி, தேஜாஸ்ரீ ஆகியோர் 574 மதிப்பெண்கள் எடுத்து நான்காம் இடத்தையும், ஆர்.தேஜாஸ்ரீ, ஆர்.எஸ்.யுவஸ்ரீ ஆகியோர் 573 மதிப்பெண்கள் எடுத்து ஐந்தாம் இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளனர். 25 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். 11 மாணவர்கள் 550க்கு அதிகமாகவும், 50 மாணவர்கள் 500க்கு அதிகமாகவும் மதிப்பெண்களை எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அதிக மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்த மாணவிகளையும், இதற்கு காரணமான ஆசிரியர்களையும் டிஜெஎஸ் கல்வி குழுமத்தின் தலைவர் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ, தாளாளர் ஆ.பழனி, முதல்வர் பி.ஞானப்பிரகாசம் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

The post பெருவாயல் டிஜெஎஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் அதிக மதிப்பெண் எடுத்து அசத்திய மாணவிகள் appeared first on Dinakaran.

Related Stories: